போரால் பெரும் துயரில் ஈழத் தமிழர்கள்-மேனன்
டெல்லி: 23 ஆண்டு காலமாக நீடித்து வரும் இனப் போரால், இலங்கைத் தமிழ் சமுதாயம் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. அதை மீண்டும் ஜனநாயகப் பாதைக்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் கூறியுள்ளார்.
அகில இந்திய வானொலிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் 23 ஆண்டுகளாக நீடித்து வரும் போரால், தமிழச் சமுதாயம் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
அதை மீட்டு, மீண்டும் அங்கு இயல்பு நிலை திரும்பவும், ஜனநாயக நடைமுறைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை நான் சந்தித்தபோது இதுகுறித்துதான் முக்கியமாக விவாதித்தோம்.
இலங்கை நிலவரம் மற்றும் அங்குள்ள அப்பாவி மக்களின் துயரம் குறித்து ஹில்லாரி கிளிண்டன் கேட்டறிந்தார். நம்மால் என்ன செய்ய முடியும் எனவும் கேட்டார். அதற்கு நான் நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யலாம் என்றேன்.
தற்போது இந்தியாவின் சார்பில் அங்கு ஒரு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்த மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். போர்க்களத்திலிருந்து தப்பி வரும் மக்களுக்குத் தேவையானதை செய்து வருகிறோம்.
அப்பகுதி மக்களுக்கு மறு வாழ்வுக்கான தேவைகளை செய்து வருகிறோம். இதன் மூலம் வடக்கு இலங்கையில் தமிழ் மக்கள் விரைவில் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.
23 ஆண்டுகளாக நீடித்து வரும் போரால் தமிழ் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். அது அவர்களை வெகுவாக பாதித்துள்ளது. அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டியது அவசியம். இது இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது என்றார் மேனன்.
இன்று தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு
இதற்கிடையே, மேனனை இன்று வி.எஸ்.சம்பந்தன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்துப் பேசவுள்ளனர்.
-
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications