தமிழகம்-புதுவையில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்
சென்னை: இறுதிக் கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள 40 தொகுதிகளுக்கும் கடைசிக் கட்டமாக மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (17ம் தேதி) தொடங்குகிறது.
24ம் தேதி வரை மனுத் தாக்கல் செய்யலாம்.
25ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
27ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம்.
17ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினசரி முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.
மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 3 வாகனங்கள் மட்டுமே வரவேண்டும். தேர்தல் அதிகாரி அறைக்கு வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்துள்ளது.
மனுத்தாக்கல் தொடங்கும் நாளையும், நாளை மறுநாளும் அஷ்டமி, 19ம் தேதி நவமி என்பதால் இந்த மூன்று நாட்களும் வேட்பு மனு தாக்கல் மகா மந்தமாக இருக்கும்.
20ம் தேதி அதிமுக வேட்பாளர்கள் மொத்தமாக மனு தாக்கல் செய்யவுள்ளனர். மேலும் 23ம் தேதியும், 24ம் தேதியும் நல்ல நாட்கள் என்பதால் அன்றைய தினம் பெருமளவில் மனுத்தாக்கல் இருக்கும் எனத் தெரிகிறது.
முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான மு.க.அழகிரி கடைசி நாளான 24ம் தேதி மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications