இந்தியர்கள் கறுப்புப் பணம்:100 நாளில் மீட்பேன்-அத்வானி
மும்பை: பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் சுவி்ஸ் வங்கிகள் உள்பட வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் மீட்கப்படும் என்று அக் கட்சியின் பிரதமர் வேட்பாளரான அத்வானி கூறியுள்ளார்.
கறுப்புப் பணத்தை மீட்பதற்காக பாஜக ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. அதன் இடைக்கால அறிக்கையை அத்வானி வெளியிட்டு நிருபர்களிடம் பேசுகையில்,
பாஜக இதுவரை சொன்னதை எல்லாம் செய்துள்ளது. இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றுவோம் என்று கூறினோம். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி 1998ம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்தி அணு ஆயுத நாடாக மாற்றினோம்.
கறுப்பு பணம் நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. கறுப்பு பணம்தான் பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ. 25 லட்சம் கோடியிலிருந்து ரூ. 70 லட்சம் கோடி வரை இருக்கும் என்று எங்களது சிறப்புக் குழு மதிப்பீடு செய்துள்ளது என்றார்.
ஆட்சியில் இருந்தபோதே இந்த கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர நீங்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்டதற்கு,
கறுப்புப் பணத்தை மீட்க எங்கள் அரசு திட்டமிட்டது. ஆனால் அப்போது நிலைமை வேறுவிதமாக இருந்தது. வெளிநாட்டில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்க வேண்டுமானால் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு தேவை. மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இல்லாமல் அதை செய்ய முடியாது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கத்திய நாடுகளும் கறுப்புப் பணத்தை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. எனவே இந்த நேரத்தில் இந்தியாவும் கறுப்புப் பணத்தை கொண்டு வர முயற்சி எடுத்தால் பலன் கிடைக்கும் என்றார்.
கேட்டால் விவரம் தருவோம...சுவிட்சர்லாந்து தூதர்:
இந் நிலையில் டெல்லியில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதர் பிலிப் வெல்டியிடம் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,
இந்தியாவை சேர்ந்தவர்களின் கறுப்பு பணத்தின் விவரங்களை கேட்டு கோரிக்கை எதுவும் எங்கள் நாட்டுக்கு இதுவரை வரவில்லை. அப்படி கோரிக்கை வந்தால் அதுபற்றி பரிசீலித்து, சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்கள் நாட்டின் சட்ட விதிகளின்படி பணத்தை முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களிடம், அந்த பணம் வந்ததற்கான ஆதாரங்களை கேட்டு பெறுகிறோம்.
கிரிமினல் குற்றவாளிகளை பாதுகாப்பது எங்கள் நோக்கம் அல்ல. கெளரவமான வாடிக்கையாளர்களின் சட்டபூர்வ உரிமைகளின் அடிப்படையில், பணம் தொடர்பான ரகசியங்களை பாதுகாத்து வருகிறோம். அதே நேரத்தில், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நாட்டின் அரசு வங்கிகளிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம்.
மற்றபடி கறுப்புப் பணம் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் அத்வானி பேசி வருவது குறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
-
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்.. ஈரான் அனுமதி.. ஜெய்சங்கர் தரமான சம்பவம் -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி!










Click it and Unblock the Notifications