நளினி விடுதலை கோரும் வழக்கு-சிபிஐக்கு நோட்டீஸ்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், மத்திய அரசு ஜெயின் கமிஷனை அமைத்து ராஜீவ் கொலையில் சதியின் பின்னணி பற்றி விசாரணை நடத்தப்பட்டது. ஜெயின் கமிஷன் அளித்த இறுதி அறிக்கையில், ஆயுத வியாபாரி சந்திராசாமி உள்ளிட்டோரை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது.
இதன் அடிப்படையில் சிபிஐ கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது.
பொதுவாக ஒரு கமிஷன் அறிக்கை அளிக்கப்பட்ட பிறகுதான் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி 26 பேருக்கு தடா சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை வாங்கி கொடுத்தது.
உச்சசநீதிமன்றத்தில் நளினி உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை உறுதி செய்யப் பட்டது. மற்றவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதில் நளினி தாக்கல் செய்த கருணை மனுவை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஜெயின் கமிஷன் அறிக்கை மீது மேல் விசாரணை நடைபெற்ற போது கடந்த 18 ஆண்டுகளாக நளினி உள்ளிட்ட 7 பேர் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
எனவே இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் அளித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று வேலுச்சாமி கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தர்மாராவ், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கருப்பன் ஆஜரானார்.
அப்போது, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா என்பது குறித்து சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். திங்கள்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications