அரசுப் பகுதிகளுக்கு 3000 தமிழர்கள் தப்பி வந்துள்ளனர் - ராணுவம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து 3000 தமிழர்கள் தப்பி அரசுப் பகுதிகளுக்கு வந்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்று ஒரே நாளில் வந்துள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் இத்தனை பேர் வந்திருப்பது இதுவே முதல் முறை என்றும் அது கூறியுள்ளது.
தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தி வருவதாகவும், அதனால்தான் பெருமளவிலான தமிழர்கள் அரசுப் பகுதிக்கு வருவதற்கு இயலாமல் இருப்பதாகவும் ராணுவம் கூறுகிறது.
பல்வேறு பகுதிகள் வழியாக இவர்கள் அரசுப் பகுதிக்கு வந்திருப்பதாகவும், தொடர்ந்து பலர் வருவதற்கு காத்திருப்பதாகவும் ராணுவம் கூறுகிறது.












Click it and Unblock the Notifications