பிரபாகரன் குறித்த கருணாநிதி பேச்சு - காங். நிராகரிப்பு
டெல்லி: காங்கிரஸைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம். பிரபாகரன் ஒரு தீவிரவாதி. இந்த இயக்கத்துடன் தொடர்பு கொண்ட அனைவருமே தீவிரவாதிகள்தான் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் எனது நல்ல நண்பர். அவருடைய இயக்கத்தி்ல் இருக்கும் சிலர் தீவிரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம். அதன் தலைவர் பிரபாகரன் ஒரு தீவிரவாதி.
ராஜீவ் காந்தி படுகொலைக்கு விடுதலைப் புலிகள் இயக்கமே காரணம் என காங்கிரஸ் கருதுகிறது. பிரபாகரன் பிடிபட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்துகிறோம்.
பிரபாகரன் தீவிரவாதி இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.