ரூ. 1,333 கோடி லாபம்: 1:1 போனஸ் தரும் டிசிஎஸ்!
மும்பை: இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் - டிசிஎஸ் இந்த நான்காவது காலாண்டில் மட்டும் ரூ.1333 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.
மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கிடையிலும் கடந்த ஆண்டை விட இது 7 சதவிகிதம் அதிக வருவாயையும், இந்த 4வது காலாண்டில் மட்டும் 4.6 கூடுதல் லாபத்தையும் சம்பாதித்துள்ளது டிசிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லாபம் தந்த மகிழ்ச்சியில் பங்கு ஒன்றுக்கு ரூ.5 டிவிடெண்டும், 1:1 பங்குகள் போனசும் அறிவித்துள்ளது டிசிஎஸ். இதன் மூலம் நிறுவனத்தின் பங்குகள் எண்ணிக்கை இருமடங்காகிறது.
முன்னதாக 4வது காலாண்டின் முடிவுகளை அறிவித்தார் டிசிஎஸ் சிஇஓ ராமதுரை.
நான்காவது காலாண்டில் மட்டும் ரூ.7,172 கோடி ஈட்டியுள்ளது டிசிஎஸ்.
"வரும் நிதியாண்டில் டிசிஎஸ்ஸின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஜிஇ, சிட்டி குரூப் போன்றவை லாபம் குறைந்துவிட்டதாக அறிவித்துள்ளதால், வருவாய் அளவு குறைய வாய்ப்புள்ளது" என்கிறார் டிசிஎஸ் சிஓஓ சந்திரசேகரன்.
அதே நேரம் இந்த நான்காவது காலாண்டில் 36 புதிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது டிசிஎஸ்.