ஈழ தமிழர்களுக்கு ரூ. 6.5 கோடி நிவாரண பொருட்கள்
சென்னை: இலங்கையில் உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் வாடும் 40 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு சுமார் ரூ. 6 கோடியே 46 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இந்த வார இறுதியில் அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொருட்டு, முதற்கட்டமாக கடந்த ஆண்டி நவம்பர் 13ம் தேதி 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் ரூ. 10 கோடியே 6 லட்சம் மதிப்புடைய நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலமாக இலங்கையில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் அது செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் இலங்கை தமிழ் குடும்பங்களுக்கு உதவுவதற்காக தற்போது இரண்டாம் கட்டமாக 40 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் நிவாரணப் பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, 40 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவைப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, தேயிலை, சோப்பு, சமையல் பாத்திரங்கள், தட்டுகள், டம்ளர்கள் ஆகியவையும், அதோடு வேட்டிகள், சேலைகள், லுங்கிகள், நைட்டிகள், போர்வைகள், துண்டுகள் என ரூ. 6 கோடியே 46 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புடைய நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் பார்வையிட்டார்...
இந்த நிவாரணப் பொருட்களை முதல்வர் கருணாநிதி, கடந்த 20ம் தேதி தலைமைச் செயலகத்தில் பார்வையிட்டார். இவை அனைத்தும் இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ள கப்பலில் இந்த வார இறுதிக்குள் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பப்படும். பின்னர் வழக்கம் போல் செஞ்சிலுவைச் சங்கம் வழியாக தமிழர்களுக்கு வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications