For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் தப்ப முயற்சியா?-கோலாலம்பூர் விரைந்த பலித கொகனா!

By Staff
Google Oneindia Tamil News

Palitha Kohana
கோலாலம்பூர்: விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி நடவடிக்கையில் இலங்கைப் படைகள் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொகனா, மலேசியாவுக்கு வந்துள்ளார். அங்கு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து ஆராய அவர் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் வந்துள்ள பலித கொகனா, விடுதலைப் புலிகளுக்கு மலேசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் வழியாக ஆயுதங்கள், பணம் உள்ளிட்டவை செல்வது குறித்து மலேசிய நிர்வாகத்துடன் ஆலோசிக்க வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கோலாலம்பூரில் கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு தென் கிழக்கு ஆசியாவிலிருந்துதான் பெருமளவில் ஆயுதங்களும், பணமும் வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவரான கே.பத்மநாதன், பல்வேறு போலியான பாஸ்போர்ட்களில் மலேசியாவுக்கு பலமுறை வந்துள்ளார். மேலும், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கும் அவர் போயுள்ளார் என்றார்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், மற்ற முக்கிய தலைவர்களும் கடல் மார்க்கமாக மலேசியா, இந்தோனேசியா அல்லது தாய்லாந்துக்கு தப்பி வரலாம் என்றும் ஒரு தகவல் உலா வருகிறது.

இதுதொடர்பாக மலேசிய அரசிடம் எடுத்துக் கூறி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு கோருவதற்காக பலித கொகனா வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மலேசியாவைத் தவிர ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வலுவான கட்டமைப்புகள் உள்ளன.

இந்த நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 300 மில்லியன் டாலர் பணம் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X