யாரைக் கவிழ்க்க இந்த பந்த்: ராமதாஸ் கேள்வி
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் பந்த் நடத்தியபோது எனது ஆட்சியைக் கவிழ்க்க சதி என்ற கருணாநிதி, இன்று நடத்தும் பந்த் மூலம் யாரைக் கவிழ்க்கப் போகிறார் என்று கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இன்று திமுக நடத்தும் பந்த் வெறும் கண்துடைப்புப் போராட்டம், கபட நாடகம்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பி்ல் நாங்கள் பந்த் நடத்தியபோது, பந்த் சட்டவிரோதம், எனது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்றெல்லாம் கூறினார் கருணாநிதி.
அப்படியானால் இன்று நடத்தும் பந்த் போராட்டம், யாருடைய ஆட்சியைக் கவிழ்க்க நடக்கிறது என்பதை கருணாநிதி விளக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications