போர் நிறுத்தம் செய்வதாக சொல்லவே இல்லை-இலங்கை ராணுவம்!

இதனால் இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், அவர் கூறியதைக் கேட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட முதல்வர் கருணாநிதி கூறியதும் கேள்விக்குறியதாகியுள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் பிடியில் சிக்கியுள்ள 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் தமிழர்களையும் மீட்கும் முயற்சியில் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து ஈடுபடும்.
இவர்களை மீட்கும் முயற்சியில் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும். அப்பாவிகள் தரப்பில் உயிரிழப்பு இருக்கக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில மீடியாக்களில் இலங்கை அரசும், ராணுவமும் போர் நிறுத்தம் செய்வதாக தவறான, அவதூறான, விஷமனத்தனமான செய்தி வெளியாகியுள்ளது.
இது முறையல்ல. இந்த செய்தி குப்பையில் போட தகுதியானதாகும். தீவிரவாத ஆதரவாளர்களுக்கு வளைந்து கொடுக்க விரும்புபவர்கள் பரப்பியுள்ள பொய்ச் செய்தியாகும் இது.
அரசு அறிவித்துள்ள முடிவின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், மீதமுள்ள 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் ராணுவம் செல்லும்போது அங்கு அப்பாவி மக்கள் யாரும் பலியாகி விடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.
முல்லைத் தீவு வீழ்ந்தது முதலே பாதுகாப்புப் படைகள் மிகுந்த கவனத்துடன்தான் முன்னேறி வருகின்றன. ஆயிரக்கணக்கான அப்பாவிகளை விடுதலைப் புலிகள் பிணையாளிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
தற்போது பாதுகாப்புப் படைகள் வெற்றியை அடைந்து வருகின்றன. தாக்குதல் லட்சியம் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. இனி எந்த வகையிலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் நிம்மதியாக சுவாசிக்க முடியாத அளவுக்கு நிலைமையை ஏற்படுத்தி விட்டோம்.
எனவே கன ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. இதுதான் அரசு அறிவிப்பின் உண்மையான அர்த்தம்.
எந்தவித வெளிநாட்டு நிர்ப்பந்தம் காரணமாகவும் இப்படி ஒரு அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. உலகின் மிகப் பெரிய பிணையாளிகள் மீட்பு நடவடிக்கை வெற்றியை நெருங்கியதைத் தொடர்ந்தே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications