For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய, இலங்கை தேசியக் கொடிகளை எரிக்க முயன்ற 8 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கோவை: கோவையில் இந்தியா மற்றும் இலங்கை தேசியக் கொடிகளை எரிக்க முயன்ற தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி மற்றும் தமிழ் தேச விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இன்று காலை இக்கட்சிகளைச் சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு திரண்டனர். இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டித்து முழக்கம் இட்டனர்.

பின்னர் திடீரென இந்திய, இலங்கை தேசியக் கொடிகளை எரிக்க முயன்றனர்.

இதையடுத்து போலீஸார் குறுக்கே பாய்ந்து தேசியக் கொடிகளை எரிக்க முயன்ற 8 பேரை கைது செய்தனர்.

இந்த அமளியில் இலங்கை தேசியக் கொடி ஓரளவு எரிந்து போனது. அதை போலீஸார் மீட்டு கொண்டு சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X