திண்டிவனம்-பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி-25 பேர் காயம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மூன்று பேர் பலியாயினர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு சரக்கு லாரி ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திண்டிவனம் அருகே நெடிமேலி என்ற இடத்தில் சென்ற போது ஒரு மாருதி வேன் அதனை முந்தி செல்ல முயன்றது.
வேனுக்கு வழிவிடும் வகையில் லாரி டிரைவர் வண்டியை இடது புறமாக செலுத்த முயன்றார். ஆனால், லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. அப்போது எதிரே வந்த பஸ் மீது லாரி மோத முயன்றது.
லாரியுடன் மோதி விபத்து நடந்துவிடுமோ என அஞ்சிய பஸ் டிரைவர் பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். இதையடுத்து பஸ் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.
இதில் பரமேஸ்வரி (20), ரங்கநாயகி (45), ஆறுமுகம் (60) ஆகிய 3 பேரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாமாக உயிரிழந்தார்கள். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications