இன்றும் பங்குச் சந்தைக்கு லீவு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: வியாழக்கிழமை மகாராஷ்ட்ராவில் பொதுத்தேர்தல் என்பதால் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது.
இன்று மகாராஷ்ட்ர மாநிலம் உருவானதைக் கொண்டாடும் மகாராஷ்ட்ர தினம் என்பதால் விடுமுறைதான்.
அடுத்த இரு தினங்களும் வார விடுமுறை நாட்கள் என்பதால் 4 நாட்கள் பங்குச் சந்தைக்கு தொடர் விடுமுறை.
நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 401 புள்ளிகள் உயர்ந்திருந்தது. நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 3483 புள்ளிகளாக இருந்தது.
பத்திரங்கள், தங்கம்-வெள்ளி மற்றும் நாணய மாற்றுச் சந்தையும் இந்த நாட்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications