ராஜஸ்தான்: விழுந்து நொறுங்கிய சுகோய்-30, விமானி பலி

இந்தியாவின் அதி நவீன போர் விமானங்களில் சுகோய் 30எம்கேஐ ரக விமானமும் ஒன்று. இந்த விமானங்களை ரஷ்யாவின் சுகோய் நிறுவனமும், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. கடந்த 1997ல் இந்த விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன.
இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் இருந்து பயிற்சிக்காக கிளம்பிய ஒரு சுகோய் விமானம் அங்கிருந்து சுமார் 70 கிமீ தூரத்தில் உள்ள ராஜ்மதாய் எனும் கிராமத்தில் விழுந்த நொறுங்கியது.
விமானம் விபத்தில் சிக்கப்போவதை அறிந்த விமானிகள் விங் கமாண்டர் எஸ்வி முன்சே மற்றும் விங் கமாண்டர் பிஎஸ் நராங் ஆகியோர் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தனர். அப்போது விமானி பிஎஸ் நராங் பலத்த காயமடைந்து மரணமடைந்தார். முன்சே தப்பிவிட்டார்.
சுகோய் ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாவது இதுவே முதல் முறை. இந்த வகையைச் சேர்ந்த ஒரு விமானத்தின் மதிப்பு சுமார் ரூ. 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய விமான படையை பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் என் என் ஜோஷி கூறுகையி்ல், காலையில் 10.20 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. விமானம் புனே விமானப் படை மையத்தை சேர்ந்தது. இன்று ராஜஸ்தானில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விபத்து குறித்து இந்திய விமான படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications