முள்ளிவாய்க்காலில் ஓயாத ராணுவ தாக்குதல் - 278 தமிழர்கள் பலி
முல்லைத்தீவு: போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும், வட இலங்கையில் ராணுவத் தாக்குதல் ஓயவில்லை. நேற்று நடந்த தாக்குதலில் 58 சிறார்கள் உள்பட 278 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவரும் மருத்துவமனையை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று அதிகாலையில் இலங்கைப் படையினர் ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை தொடுத்தனர்.
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது எறிகணைகள் விழுந்து வெடித்தன. இதில் மட்டும் 19 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
இரட்டைவாய்க்கால், சாளம்பன், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, இரட்டைப்பனையடி ஆகிய பகுதிகளை குறி வைத்து இலங்கைப் படைகள் தாக்கின.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை காணப்பட்டது.
பின்னர் மாலை 3 மணிக்கு ஆர்ட்டில்லரி தாக்குதல்களில் இலங்கை ராணுவம் ஈடுபட்டது.
இதில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் ரத்த வங்கிப் பகுதியில் குண்டு விழுந்து வெடித்ததில் அங்கு இருந்த நோயாளிகள் 19 பேர் உயிரிழந்தனர்.
நேற்றைய தாக்குதல்களில் 278 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 58 பேர் சிறுவர், சிறுமியர் ஆவர். 298 பேர் காயமடைந்தனர்.
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம், இது போர் நிறுத்தம் போலத்தான் என ராஜபக்சே உறுதியாக கூறியும் கூட தொடர்ந்து நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications