For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீர்ப்ப மாத்த மாட்டீங்களே?!-சரத் குமார்

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சமக தலைவர் சரத் குமாரிடம் அப்பகுதி பெண்கள் எங்களுக்கு நாட்டாமை நீங்கதான் எனக் கூறினர். பதிலுக்கு சரத்குமார், தீர்ப்பை மாத்திட மாட்டேங்களே என நகைச்சுவைக்க கூட்டத்தில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமானது.

சரத்குமாரின் சமக சார்பில் நெல்லை தொகுதியிலும் கரு.நகராஜனும், தூத்துக்குடி தொகுதியிலும் கரத்தே சரவணனும் போட்டியிடுகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் சரத்குமார் ஈடுபட்டு வருகிறார்.

ஆலங்குளம் பகுதியில் வேட்பாளர் கரு.நாகராஜனுடன் சரத்குமார் திறந்த வேனில் பிரசசாரம் செய்தார். உக்கிரன்கோட்டை அருகேயுள்ள வடக்கு வாகைகுளத்திற்கு வந்த அவர் வேனை விட்டு கீழே இறங்கினார்.

சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்களிடம் என்ன, எல்லோரும் நல்ல இருக்கிறீர்களா என நலம் விசாரித்து அனைவரிடமும் கைகுலுக்கி மறக்காமல் தாமரை சின்னத்திற்கு ஓட்டு போடுங்க என்றார்.

கழுநீர்குளம் பகுதியில் அவர் இதே போல் கிராமத்து பெண்கள் கூ்ட்டத்தை சந்தித்தபோது ஒரு சில குழந்தைகள் சட்டை இல்லாமலும், கிழிந்த சட்டை போட்டிருப்பதையும் பார்த்தார். பெற்றோர்களிடம் குழந்தைகள்தான் நமது எதிர்காலம். அவர்களை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். நல்ல ஆடைகளை அணிவியுங்கள்.

குழந்தைகளின் கல்விக்கும், எதிர்காலத்திற்கும் நான் நல்ல வழி செய்வேன் என்றார். அத்தியூத்து பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு வந்து சரத்குமார் தங்கள் தெருவுக்கு பிரசாரம் செய்ய வரவேண்டும் என்றனர்.

அப்போது அங்கிருந்த ஒரு பெண் எங்க ஊருக்கு எப்போதுமே நீங்கதான் நாட்டாமை என்றார். இதை கேட்டு கூட்டமே பகீர் என்று சிரித்தது. இந்த தீர்ப்பை மாத்தி சொல்லிட மாட்டேங்களே என சரத்குமார் பதில் சொல்ல கூட்டமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X