திசைமாறிய படகு-நடுக் கடலில் பட்டியினால் பலியான 10 ஈழ அகதிகள்

இலங்கை ராணுவத்தால் ஈழப் பகுதியில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பலியாகி வருகின்றனர். இதையடுத்து அவர்கள் உயிருக்கு பயந்து வெளி நாடுகளுக்கு தப்பிவிடுவது வழக்கம். தமிழநாட்டிலும் ஏரளாமான தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் 21 தமிழர்கள், முல்லைத்தீவு பகுதியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வருவதற்காக படகு ஒன்றில் கிளம்பியுள்ளனர். அவர்களுக்கு படகில் வந்த ஒருவர் வழிகாட்டுவதாக கூறியுள்ளார்.
ஆனால், நடுக்கடலில் படகு வழி தவறி தமிழகத்தில் இருந்து விலகி ஆந்திரா நோக்கி சென்றுள்ளது. ராமேஸ்வரம் அருகில் இருப்பதால் உணவு, பொருட்கள் தண்ணீர் எதுவும் கொண்டு வராத மக்கள் பசியில் தவித்துள்ளனர். குடிக்க தண்ணீர் கிடைக்காமல் வாடியுள்ளனர்.
தொடர்ந்து பயணம் செய்த நிலையில் கரையை காண முடியாமல் அவர்கள் தவித்துள்ளனர். இந்நிலையில் படகில் இருந்தவர்களில் ஒருவர் பின் ஒருவராக பட்டினியில் இறந்துள்ளனர். மொத்தம் வந்த 21 பேரில் 10 பேர் இறந்துவிட்டனர். மீதி 11 பேர் நேற்று ஆந்திராவின் காகினாடா பகுதியில் உள்ள உப்படாவில் வந்திறங்கினர்.
வெயிலில் கடலில் பயணம் செய்ததாலும், தண்ணீர் சரியாக குடிக்காத காரணத்தாலும், கரைசேர்ந்த அந்த 11 பேருக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கிழக்கு கோதவரி மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ண திரிவேதி கூறுகையில், அவர்கள் விரைவில் ராமேஸ்வரம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார்.
உயிர் பிழைத்த மேரி ஜோசப் பென்னி என்ற பெண் கூறுகையில், எனது குடும்பத்துடன் வந்தேன். வரும் வழியில் என் கணவர், இரண்டு மகன்கள், ஒரு மகள் என நான்கு பேரும் பசியால் துடிதுடித்து இறந்துவிட்டனர் என கதறியபடி கூறியது அருகில் இருந்தவர்களின் கண்களையும் ஈரமாக்கிவிட்டது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications