இலங்கைக்கு ஐஎம்எப் நிதியை நிறுத்த பிரான்ஸ்-பிரிட்டன் முயற்சி

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தன்னைச் சந்தித்த பிரிட்டன், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களிடம் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய கூறுகையில்,
இலங்கை பிரச்சனையை பல நாடுகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. 30 ஆண்டு போராட்டத்துக்கு பின் இப்போது தான் புலிகளையும் பிரபாகரனையும் ஒழிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே பிரபாகரனை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கும் வரை தாக்குதலை நிறுத்த மாட்டோம். இப்போது போர் நிறுத்தம் செய்தால், அது புலிகள் மீண்டும் பலம் பெற மட்டுமே உதவும், மேலும் பிரபாகரன் தப்பிச் செல்லவும் உதவும் என்று கூறிவிட்டார்.
போர் நிறுத்தம் செய்ய இலங்கை ஒப்புக் கொள்ளாததையடுத்து சர்வதேச நிதியமான ஐஎம்எப் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படவிருந்த ரூ. 9,500 கோடி நிதியை தாமதப்படுத்துமாறு பிரிட்டனும் பிரான்சும் கோரியுள்ளன.
மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிட்டனுடன் பிரிட்டன், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களான மி்ல்லிபேண்டும் பெர்னார்டும் தொலைபேசியில் தங்களது இலங்கை பயணம் குறித்தும் விளக்கினர்.
கடந்த ஆண்டு இலங்கை சுமார் ரூ. 7,500 கோடியை ஆயுதங்கள் வாங்க செலவிட்டது, இந்த ஆண்டும் ரூ. 7,100 கோடியை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications