பொய்களால் தேர்தலை வெல்ல நினைக்கிறது பாஜக: பிரதமர்
ஜலாலாபாத் (பஞ்சாப்): இல்லாத பிரச்சினைகளையெல்லாம் கிளப்பி, பொய்களால் தேர்தலை வெல்ல முயலுகிறது பாஜக என்று கடுமையாக கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
பஞ்சாப் மாவட்டம் பெரோஸ்பூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஜலாலாபாத் என்ற இடத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பாஜகவை பிடி பிடியென பிடித்தார். அவர் பேசுகையில், பொய்யான புகார்களைக் கூறி, பொய்யான பிரச்சினைகளை பெரிதுபடுத்தி, பொய்களால் தேர்தலை வெல்ல நினைக்கிறது பாஜக.
விவசாயிகள் குறித்த பிரச்சினையிலும் கூட அது பொய்களைப் பேசி வருகிறது.
கோதுமைக்கும், அரிசிக்கும் அதிக கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தது காங்கிரஸ் அரசுதான். உரங்களின் விலையைக் குறைத்து காங்கிரஸ் அரசுதான். விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ததும் காங்கிரஸ்தான்.
ஆனால் எந்தக் குறையையும் காண முடியாததால், புதிது புதிதாக பிரச்சினைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது பாஜக. தினசரி ஒரு புதுப் பிரச்சினையைக் கிளப்பி அதை பெரிதாக்க முயலுகிறார்கள். பிரச்சினைகளின் அடிப்படையில் இல்லாமல், பொய்களின் அடிப்படையில் தேர்தலை வெல்ல நினைக்கிறது பாஜக.
இலக்கே இல்லாமல்க காங்கிரஸ் மீது சரமாரியாக புகார்களைக் கூறி வருகிறது பாஜக.
பஞ்சாபில் பாஜகவும், சிரோன்மணி அகாலிதளமும் வெறும் சத்தம் மட்டுமே எழுப்பி வருகின்றன. காரியத்தில் எதுவும் இல்லை. சொல்வதை அவர்கள் செய்வதில்லை. கடந்த ஆறு ஆண்டு கால பாஜக-அகாலிதள ஆட்சியில் மக்களுக்காக இவர்கள் என்ன செய்தார்கள். ஒன்றுமே செய்யவில்லை. மாறாக வேடிக்கை தான் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
நான் இவர்களைப் போல இல்லாமல், முற்போக்காக சிந்திக்க விரும்புகிறேன். நம் முன் பல புதுப் பாதைகள் உள்ளன. நமது விவசாயப் புரட்சிக்கு நாம் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications