தமிழகத்தின் வாழ்வாதரங்களை காங். அழித்துவிட்டது-வைகோ
Subscribe to Oneindia Tamil

தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லிங்கத்தை ஆதரித்து கடையநல்லூரில் பொது கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அதி்முக புறநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் வைகோ பேசுகையி்ல்,
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தமிழகத்தின் வாழ்வாதரங்களை அழித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள காவேரி, பாலாறு, ஒகேனக்கல், முல்லை-பெரியாறு உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டது. தமிழகத்தில் உள்ளி ஜீவநதிகள் அழிந்து வருகின்றன.
மின்தட்டுபாட்டால் அனைத்து துறைகளும் செயல் இழந்துவிட்டன. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உலக நாடுகள் வலியுறுத்தியும், இந்தியா வலியுறுத்தவில்லை.
தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெரும். மத்தியில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக ஜெயலலிதா விளங்குவார் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications