For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15,300 ஏடிஎம்களைத் திறக்கும் ஸ்டேட் வங்கி

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: நாடு முழுவதும் இந்த ஆண்டுக்குள் 15300 ஏடிஎம்களைத் திறக்கப் போகிறது பாரத ஸ்டேட் வங்கி.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் எந்த ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் கட்டணமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்ததுடன், அரசு வங்கிகள் கிளைகள் இல்லாத பகுதிகளிலும் ஏடிஎம்களை அமைத்துக் கொள்ள அணுமதி அளித்தது. இதற்கு முறையான முன் அனுமதி கூடத் தேவையில்லை என்று அறிவுரைத்தது.

இதனால் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற 5 வங்கிகளும் புதிய ஏடிஎம்களைத் திறக்க முடிவு செய்துள்ளன.

தற்போது ஸ்டேட் வங்கியின் குழும வங்கிகளுக்கு 11600 ஏடிஎம்கள் உள்ளன. புதிதாக திறக்க உள்ள வங்கிகளையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 25000 ஏடிஎம்கள் நாடு முழுவதும் சேவையி்ல் இருக்கும்.

இதன் மூலம் நாட்டிலேயே அதிக ஏடிஎம் கொண்ட வங்கி என்ற பெருமை ஸ்டேட் வங்கிக்கு கிடைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X