பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கே பொருத்தமானவர் - ராகுல்

நேற்றுதான் தனியார் தொலைக்காட்சிக்கு மன்மோகன் சிங் அஏளித்த பேட்டியில், நான் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றால் இடையிலேயே என்னை விட இளைய வயதுக்காரரிடம் பிரதமர் பொறுப்பை விட்டுக் கொடுத்து விடுவேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி அளித்துள்ள ஒரு பேட்டியில், பிரதமர் பதவிக்கு சரியானவர் மன்மோகன் சிங்கே. அவர்தான் தேர்தலுக்குப் பிறகு பிரதமராக பதவியேற்பார் என கூறியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில்,வரும் தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும். மீண்டும் ஆட்சி அமைக்கும். கேரளா, ஒரிசா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுக்கு பெரும் வெற்றி கிடைக்கும்.
காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்து விட்டதாக இடதுசாரிகள் நினைப்பதாக நாங்கள் கருதவில்லை. அவர்களுக்கென்று சில கருத்துக்கள் இருக்கலாம். எங்களுக்கும் தனியாக கருத்துக்கள் உண்டு. அதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாது.
என்னைப் பொறுத்தவரையிலும், எனது தாயாரைப் பொறுத்தவரையிலும், பிரதமர் பதவிக்கு சிறந்தவர் மன்மோகன் சிங் மட்டுமே. அவர்தான் எங்களது பிரதமர் வேட்பாளர். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications