For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொழும்பு தேவாலாயத்தை சூறையாடிய புத்த பிட்சுக்கள்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் பல்வேறு கிருஸ்துவ தேவாலயங்கள் மீது புத்த பிட்சுக்கள் பயங்கர தாக்குல் நடத்தியுள்ளனர். பாதிரியார் ஒருவரின் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கொழும்பில் உள்ள 150 ஆண்டு பழமையான மெத்தோடிஸ்ட் சர்ச் மீது தாக்குதல் நடத்திய பிட்சுக்கள் அதை சூறையாடினர். பின்னர் அங்கிருந்த பைபிள்கள், கம்ப்யூட்டர்கள், இசைக் கருவிகள், பாடல் புத்தகங்கள், தேவாலய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர்.

பின்னர் அந்த தேவாலயத்தின் பாதிரியாரான பிரதீப் குமாரா என்பரை குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியாறாவிட்டால் கொலை செய்வோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

இதே போல மேலும் சில தேவாலயங்களும் தாக்கப்பட்டுள்ளன.

போர் நிறுத்தம் கோரி மேற்கு நாடுகள் இலங்கையை நெருக்குவதால் பதிலுக்கு பிட்சுக்கள் இந்தத் தாக்குதலை நடத்துவதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X