கோடை-சென்னையில் பரவும் சின்னம்மை!

கோடை காலம் துவங்கியதும் உஷ்ணம் சம்பந்தமான நோய்களும் மனிதர்களை தொற்றி கொள்கிறது. உஷ்ண நோய்களில் முக்கியமானது சின்னம்மை.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் இந்த நோயின் அதிகம் தாக்கம் தெரியும். ஆனால் இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக பிப்ரவரி மாதத்திலே இந்த நோய் லேசாக பரவியது. இதையடுத்து தமிழக அரசு சரியான தடுப்பு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கிய நிலையில் இன்று சென்னையில் இரண்டு பேருக்கு இந்த நோய் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தண்டையார்பேட்டையில் அரசு மருத்துவமனையி்ல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெரிசிலா ஜோஸ்டர் வைரஸ் என்ற கிருமியால் பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 10 முதல் 21 நாள் வரை காய்ச்சல், தலைவலி, கொப்பளங்கள் போன்றவற்றால் அவதிப்பட நேரிடும். இது குழந்தைகளை விட பெரியவர்களை தான் அதிகம் பாதிக்கிறது. என்றாலும் தாய்மார்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த நோய் தும்மல், இருமல் போன்றவற்றால் காற்றில் எளிதில் பரவிவிடும். முகத்தை தவிர்த்து உடலின் பிற பகுதியில் நோயின் தாக்கம் இருக்கும். குழந்தைகளும், பெரியவர்களும் புரதம், நீர்ச்சத்துள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது அவசியம்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், சென்னையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவரை 2 பேர் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். உரிய சிகிச்சைக்கான மருந்துகள் அனைத்தும் ஸ்டாக் உள்ளன என்றார்.
-
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
கோவை வடவள்ளி நர்ஸ் கனிதா சஸ்பெண்ட்.. சமூக ஆர்வலரால் நடந்த பெரிய ட்விஸ்ட் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள்












Click it and Unblock the Notifications