For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடை-சென்னையில் பரவும் சின்னம்மை!

By Staff
Google Oneindia Tamil News

Chicken Pox virus
சென்னை: கோடை வெயில் கொளுத்துவிட்டு எரிய சென்னையில் சின்னம்மை நோய் பரவ துவங்கியுள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோடை காலம் துவங்கியதும் உஷ்ணம் சம்பந்தமான நோய்களும் மனிதர்களை தொற்றி கொள்கிறது. உஷ்ண நோய்களில் முக்கியமானது சின்னம்மை.

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் இந்த நோயின் அதிகம் தாக்கம் தெரியும். ஆனால் இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக பிப்ரவரி மாதத்திலே இந்த நோய் லேசாக பரவியது. இதையடுத்து தமிழக அரசு சரியான தடுப்பு நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கிய நிலையில் இன்று சென்னையில் இரண்டு பேருக்கு இந்த நோய் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தண்டையார்பேட்டையில் அரசு மருத்துவமனையி்ல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெரிசிலா ஜோஸ்டர் வைரஸ் என்ற கிருமியால் பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 10 முதல் 21 நாள் வரை காய்ச்சல், தலைவலி, கொப்பளங்கள் போன்றவற்றால் அவதிப்பட நேரிடும். இது குழந்தைகளை விட பெரியவர்களை தான் அதிகம் பாதிக்கிறது. என்றாலும் தாய்மார்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த நோய் தும்மல், இருமல் போன்றவற்றால் காற்றில் எளிதில் பரவிவிடும். முகத்தை தவிர்த்து உடலின் பிற பகுதியில் நோயின் தாக்கம் இருக்கும். குழந்தைகளும், பெரியவர்களும் புரதம், நீர்ச்சத்துள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது அவசியம்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், சென்னையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவரை 2 பேர் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். உரிய சிகிச்சைக்கான மருந்துகள் அனைத்தும் ஸ்டாக் உள்ளன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X