யார் வேண்டும்? இடதுசாரியா...திரிணமுலா-காங்கிரசுக்கு மம்தா கேள்வி
கொல்கத்தா: இடதுசாரிகளுடன் கூட்டணி வைக்கும் யாருடனும் திரிணமுல் காங்கிரஸ் கூட்டணி சேராது. காங்கிரஸ் கட்சி தாங்கள் யாருடன் கூட்டணி சேர்வது என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி தேர்தலுக்கு பின் இடதுசாரிகள் ஆதரவு கொடுத்தால் அதை ஏற்று கொள்வோம் என கூறியிருந்தார். இதற்கு திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இடதுசாரிகள் இருக்கும் இடத்தில் திரிணமுல் காங்கிரஸ் இருக்காது. இரண்டு கட்சிகளுமே பரம எதிரிகள். இதனால் காங்கிரஸ் கட்சியால் இடதுசாரிகள் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் என இரண்டும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியாது.
ராகுல் காந்தியின் வார்த்தை எங்களை புண்படுத்திவிட்டது. யாருடன் கூட்டணி என்பதை அவர்கள் தான் இறுதி செய்ய வேண்டும்.
இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்தால் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்க மாட்டோம், விலகி விடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications