இலங்கை அணிக்கு ஆலோசகர் ராணுவ அதிகாரி!
கொழும்பு: லாகூரில் இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னாள் ராணுவ தலைவர் ஒருவரை பாதுகாப்பு ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானில் லாகூர் நகரில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க சென்ற இலங்கை வீரர்கள் தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 6 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு தற்போது இலங்கை அணி அடுத்த மாதம் 5ம் தேதி இங்கிலாந்தில் துவங்கவிருக்கும் டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ராணுவ தலைவர் லாரன்ஸ் பெர்ணான்டோவை நியமித்துள்ளது.
இது குறி்தது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இணையத்தில்,
துரதிருஷ்டவசமான லாகூர் சம்பவத்துக்கு பின் இலங்கை அணியின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இது போன்ற சம்பவம் இனியும் நடைபெறாமல் இருக்க மேஜர் ஜெனரல் லாரன்ஸ் பெர்ணான்டோவை அணியின் பாதுகாப்பு ஆலோசகராக நியமித்துள்ளோம்.
அவர் உள்நாடு, வெளிநாடுகளில் என இலங்கை பங்கேற்கும் அனைத்து போட்டிகளுக்கும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்குவார் என்கிறது.












Click it and Unblock the Notifications