நளினி-பிரியங்கா சந்திப்பு குறித்து ஜெ. கேட்கக் கூடாதாம் -மணிசங்கர அய்யர் கூறுகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலூர் சிறையில் பிரியங்காவும், நளினியும் பேசிக் கொண்ட விவரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியிருப்பது முட்டாள்தனமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அய்யர் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதா பேசியுள்ளது முட்டாள்தனமான பேச்சு. இதை ஜெயலலிதா உலக அறிவுச் சொத்து உரிமை கழகத்தில் பதிவு செய்து காப்புரிமை பெற்று வைத்துக் கொள்ளலாம்.
தனிப்பட்ட முறையில்தான் நளினியை சிறைக்குச் சென்று சந்தித்தார் பிரியங்கா. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த மோசமான அசம்பாவிதம் குறித்து அறிந்து கொள்ளவே அவர் சிறைக்குச் சென்றார். அவர் நளினியின் மீது காட்டிய அனுதாபத்திற்கு, பிரியங்காவை இயேசு கிறிஸ்து, மகாத்மா காந்தி ஆகியோரோடு ஒப்பிடலாம் என்றார் அய்யர்.












Click it and Unblock the Notifications