கடற் புலிகளின் தளபதி-செய்தித் தொடர்பாளர் பலி
அதே போல விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையனும் பலியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கடற் புலிகளின் இரண்டாவது தளபதியான செழியன் கடற்படையினருடன் நடந்த பல மோதல்களில் பங்கேற்றவர். கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி கடற்படையினருடன் நடந்த சண்டையில் காயமடைந்திருந்தார்.
ஆனாலும் இப்போதைய போரிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந் நிலையில் கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகள் அமைத்திருந்த மண் அணையை கைப்பற்ற நடந்த மோதலில் செழியன் பலியானார்.
புலிகளின் தகவல் தொடர்பு பரிமாற்றத்தை இலங்கை ராணுவம் இடைமறித்து கேட்டபோது செழியன் பலியான தகவல் உறுதி செய்யப்பட்டது.
ராசையா இளந்திரையனும் படுகாயம்:
அதே போல இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையனும் படுகாயமடைந்துள்ளார் என்று கூறப்பட்டது. இந் நிலையில் அவரும் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
மட்டக்களப்பைச் சேர்ந்தவர் இளந்திரையன். விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.