இந்தியா-மைக்ரோசாப்ட்டில் மேலும் ஆட்குறைப்பு
பெங்களூர்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இந்தியப் பணியாளர்களில் 1 சதவிகிதம் ஆட்குறைப்பு செய்துள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாதிலுள்ள தங்கள் அலுவலகப் பணியாளர்களுக்கு இதுகுறித்த நோட்டீஸை கடந்த மே 5-ம் தேதியே அனுப்பியுள்ளது.
இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்படப்போவது மைக்ரோ சாப்டின் விற்பனைப் பிரிவுதான் என்றும், வாடிக்கையர் சேவைப் பிரிவிலும் கணிசமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
2010-ம் ஆண்டுக்குள் 5000 பணியாளர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜனவரியில் அறிவித்தது நினைவிருக்கலாம்.
இதுவரை 4400க்கும் மேற்பட்டோரை இந்த திட்டத்தின் கீழ் மைக்ரோசாப்ட் நீக்கியுள்ளது. இது மூன்றாம் கட்ட ஆட்குறைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 5500 பணியாளர்களை நீக்கும் திட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications