போட்டியிலிருந்து திருமாவளவன் திடீர் விலகல்!
திருச்சி: நமது செய்தியாளர் இப்படி ஒரு தலைப்பைப் போட்டு செய்தியை அனுப்பியபோது செய்திப் பிரிவில் இருந்த நாங்களும் திடுக்கிட்டுப் போனோம்.
விஷயம் வேற... இந்த திருமாவளவன் திருச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை ஆவார்.
இவர் போட்டியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நாளை மே 13ம் தேதி நடக்கிறது. திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் சாருபாலா தொண்டைமானும், அதிமுகவின் ப.குமார் உட்பட 24 பேர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த திருமாவளவன் என்பவரும் ஒருவர். இந்த நிலையில் அவர் போட்டியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும் தகவல் தெரிவித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து திருச்சி வேட்பாளர்களின் எண்ணிக்கை 24 இல் இருந்து 23 ஆக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications