ஈழ படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும்: மிலிபான்ட்
நியூயார்க்: இலங்கையில் பெருமளவில் நடந்து வரும் தமிழினப்படுகொலைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கூறியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தை ரஷ்யாவும், சீனாவும் புறக்கணித்து விட்டன.
அதேபோல வியட்நாமும் இதில் பங்கேற்கவில்லை. இந்த நாடுகள் தவிர இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் டேவிட் மிலிபான்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் வார இறுதியில் நடந்து வரும் படுகொலைச் சம்பவங்கள் பெரும் கவலை அளிக்கின்றன. விரக்தியை ஏற்படுத்துகின்றன.
இந்தப் படுகொலைகள் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பேசவுள்ளனேன்.
ஆதாரங்களே இல்லாமல் நடந்து வரும் இனப்படுகொலைப் போர் இது. உடனடியாக சர்வதேச சமுதாயம் இதுகுறித்து அக்கறை காட்ட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
முதலி்ல் அங்கு படுகொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். போர்ப் பகுதியில் சிக்கியுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இலங்கையிலிருந்து பத்திரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டது குறித்தும் நான் எழுப்பினேன். இதை அனைவரும் கண்டிக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.
போர் நடைபெறும் பகுதியில் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய அனைவருக்கும் வாய்ப்பினை இலங்கை அரசு வழங்க வேண்டும். வெளிப்படையாக நடந்து கொள்ள அது முன்வர வேண்டும் என்றார் மிலிபான்ட்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications