தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்-விஜய்காந்த்
சென்னை: தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது என்று அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த் கூறினார்.
இன்று காலை 9.45 மணிக்கு தன் மனைவி பிரேமலதாவுடன் விருகம்பாக்கம் காவேரி பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் அவர் வாக்களித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
கேள்வி: தேமுதிக வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
விஜய்காந்த்: தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது.
கேள்வி: தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?
விஜய்காந்த்: 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
கேள்வி: எந்த அடிப்படையில் இப்படி சொல்கிறீர்கள்?
விஜய்காந்த்: மற்ற கட்சிகள் எந்த அடிப்படையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார்களோ அதே அடிப்படையில் நானும் சொல்கிறேன். நான் பிரச்சாரம் செய்த இடங்களில் பொதுமக்கள் உற்சாகமாக வந்து உங்களுக்குத்தான் ஓட்டு என்று கூறினார்கள். அதை வைத்தும் சொல்கிறேன்.
எல்லா இடங்களிலும் வாக்குபதிவு நன்றாக நடந்து கொண்டுள்ளது. நான் காசை நம்பவில்லை. மக்களையும், கடவுளையும் நம்பி இருக்கிறேன்.
கேள்வி. தேமுதிக வென்றால் மத்தியில் யாரை ஆதரிப்பீர்கள்?
விஜய்காந்த்: 16ம் தேதிக்கு பின் என் முடிவை அறிவிக்கின்றேன் என்றார்.