கன்னியாகுமரியில் வெறும் 26% வாக்குப் பதிவு!
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: தமிழகத்திலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாவட்டம் என்ற பெருமையை உடைய கன்னியாகுமரியில் பிற்பகல் 1 மணி வரை 26 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.
தமிழகத்திலேயே படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரிதான். கன்னியாகுமரி தொகுதியில் இன்று காலை முதல் மந்தமாகவே வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி வெறும் 26 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளனவாம். மேலும், வாக்களிக்க விரம்பவில்லை என்று பலரும் 49 ஓ பாரத்தை கொடுத்து வருகின்றனராம்.
கல்வியறிவு மிக்க மாவட்டத்தில் மிகக் குறைந்த வாக்குப் பதிவு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குமரியில் திமுக சார்பில் ஹெலன் டேவிட்சன், பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், சிபிஎம் சார்பில் பெல்லார்மின், தேமுதிக சார்பில் ஆஸ்டின் ஆகியோர் களத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications