முதல் ரேங்க் பெற்ற கூலித் தொழிலாளி மகன்
பிளஸ் டூ தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்த மாணவ, மாணவர்களில் 4 பேர் மொத்தம் 1183 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் ரேங்கை பிடித்துள்ளனர்.
இதில் பிரவீனும் ஒருவர். கரூர் அருகே உள்ள வெண்ணலையில் உள்ள சேரன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தவர்.
அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்:
தமிழ் - 192, ஆங்கிலம் - 192, இயற்பியல் - 199, வேதியல் - 200, கணிதம் - 200, கணினி அறிவியல் - 200, மொத்தம் - 1183 .
இது குறித்து மாணவர் பி்ரவீன் நம்மிடம் கூறுகையில்,
நான் இந்த வெற்றியை பெற என்னுடைய பெற்றோர்களும், பள்ளி ஆசி்ரியர்களும், தலைமை ஆசிரியரும் தான் காரணம் என்றார்.
பிரவீனின் தந்தை ஆறுமுகம் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். பிரவீன் அம்மா காந்திமதி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவன் பிரவீனுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.