குடிபோதையில் அமைச்சர் வீட்டில் காரை மோதியவர் கைது
டெல்லி: குடிபோதையில் காரை ஓட்டி மத்திய அமைச்சர் ஒருவரின் வீட்டு சுவரில் மோதியவரை போலீசார் கைது செய்தனர்.
தெற்கு டெல்லி பகுதியில் உள்ள மால்வியா நகரை சேர்ந்தவர் வினய் சிக்கா. நேற்று இரவு அவர் நன்றாக குடித்துவிட்டு தனது தோழியுடன் விலையுயர்ந்த ஸ்கோடா காரில் சானக்யபுரி பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது இரவு 10.30 மணியளவில் அவரது கார் நிலை தடுமாறி மத்திய அமைச்சர் ஒருவரின் வீட்டு சுவரில் மோதியது. இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அவர் நன்றாக குடித்துவிட்டு வண்டி ஓட்டியுள்ளார். காரில் அதிவேகமாக வந்துள்ளார். சுவரில் மோதுவதற்கு முன்னதாக வரும் வழியில் ஒரு பைக்காரர் மீது மோதியுள்ளார். அதில் அந்த பைக்கை ஓட்டிய ஹேமந்த் குமார் என்பவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
ஆனால், வினய் சிக்கா அங்கு வண்டியை நிறுத்தாமல் வந்துவிட்டார். பைக்கை ஓட்டி வந்தவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications