அரசமைப்பு - அமர்சிங்குடன் பிரணாப் முகர்ஜி ஆலோசனை

லோக்சபா தேர்தலில் காங்கிரஸும், சமாஜ்வாடியும் சண்டை போட்டுக் கொண்டு தனித் தனியாக போட்டியிட்டன என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில், சமாஜ்வாடி கட்சியின் ஆதரவை கோரியுள்ளது காங்கிரஸ்.
இதுதொடர்பாக பிரணாப் முகர்ஜியை, அமர்சிங் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்கின் அழைப்பை ஏற்று அமர்சிங் பிரணாப் முகர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது பேரம் ஏதும் நடக்கவில்லை என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக முக்கிய அமைச்சரவை இலாகாக்கள் குறித்து சமாஜ்வாடி தலைவருடன் விவாதிக்கப்படவில்லை. அது உடன்பாடு ஏற்பட்ட பின்னர்தான் விவாதிக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல அமைச்சர் பதவியை கேட்க சமாஜ்வாடியும் அவசரப்டவில்லை என்று தெரிகிறது. தேர்தல் முடிவு வெளியான பின்னர் தமக்குக் கிடைக்கும் சீட்களைப் பொறுத்து அதுகுறித்து பேரம் பேசலாம் என சமாஜ்வாடி கருதுகிறதாம்.












Click it and Unblock the Notifications