3 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு அமைதியாக முடிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 3 வாக்குச் சாவடிகளுக்கு இன்று மறு வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
சேலம், அரக்கோணம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் உள்ள தலா ஒரு வாக்குச் சாவடியில் இந்த மறு வாக்குப் பதிவு நடந்தது.
அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட, ஆற்காடு சட்டசபைத் தொகுதியின் கீழ் வரும் மேல்வல்லம் 30ம் எண் வாக்குச் சாவடி, சேலம் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி சட்டசபைத் தொகுதியின் கீழ் வரும் அமணி கொண்டலாம்பட்டி 41ம் எண் வாக்குச் சாவடி, பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட, தொண்டாமுத்தூர் சட்டசபைத் தொகுதியின் கீழ் வரும் தொம்பிலிப்பாளையம் 32ம் எண் வாக்குச் சாவடி ஆகியவற்றில் வாக்குப் பதிவு நடந்தது.
மாலை 5 மணிக்கு மறு வாக்குப் பதிவு முடிந்தது. அமைதியான முறையி்ல மறு வாக்குப் பதிவு நடந்தது.












Click it and Unblock the Notifications