சுனாமி போல பாய்ந்து வந்த பணத்தால் சாகடிக்கப்பட்ட ஜனநாயகம்-வைகோ
சென்னை: தமிழகத்திலும், புததுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டமி சுனாமி வெள்ளமாக செலுத்திய ஊழல் பணத்தால் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு விட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை..
தமிழகத்திலும், புதுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டமி சுனாமி வெள்ளமாக செலுத்திய ஊழல் பணத்தால் பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டது.
இருப்பினும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்த இந்த கூட்டணி பெற்ற வெற்றி ஜனநாயகத்திற்கு சூட்டப்பட்ட மகுடமாகும்.
விருதுநகர் தொகுதியில், எனது வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணிக் கட்சியினருக்கும், எனக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள்.
கூட்டணியின் நலன் காக்கவும், ஈழத் தமிழர் துயர் துடைக்கவும், இந்திய ஜனநாயகத்திற்கு வலுவூட்டவும், முன்பை விட முனைப்புடன் செயல்படுவோம் என்று கூறியுள்ளார் வைகோ.