பாமக தோல்வி: துரோகமே காரணம்-தங்கபாலு
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசுக்கு செய்த துரோகமே பாமக தோல்வியடைந்ததற்கு காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட பாமக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட்கள் இம்முறை அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டனர். இதில் பாமக 7 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
இந் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில்,
சில அரசியல் சந்தர்ப்பவாதிகள் மக்கள் மத்தியில் தவறான, அவதூறான பிரச்சாரங்களை திட்டமிட்டு பரப்பினர். இதன் காரணமாக சில தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். என்றாலும் கூட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் தியாகத்திற்கும், பிரதமர் மன்மோகன்சிங்கின் மகத்தான மக்கள் நலப்பணிக்கும் இந்திய மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வந்த சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோருக்கும் முதல்வர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்த காரணத்தால் தான் பாமக இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இலங்கை பிரச்சினைக்கும் இந்த தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை.
இந்த பிரச்சினையில் அதிமுக சில சக்திகளுடன் சேர்ந்து எதிராக செயல்பட முயற்சித்தது. அது முடியவில்லை. இலங்கை பிரச்சினையில் சுமுக முடிவு காண மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்கும்.
ராகுல் எதிர்கால பிரதமர்...
ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் விரும்புகிறார்கள். தமிழ்நாடு காங்கிரசும் அதைத்தான் விரும்புகிறது. ஆனால் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் பெயரை முன்னிறுத்தி அதனை ராகுல்காந்தியும் வழிமொழிந்திருக்கிறார். ராகுல்காந்தி நிச்சயம் எதிர்காலத்தில் பிரதமர் ஆவார்.
மக்கள் அங்கீகாரம் கிடைத்துள்ளது...
மத்தியில் 5 ஆண்டுகள் நடந்த ஆட்சியையும், மாநிலத்தில் நடந்து வரும் சிறப்பான ஆட்சியையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் பரப்பி வந்த இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய அவதூறுகளை மக்கள் நிராகரித்து விட்டனர்.
நிலையான ஆட்சியை காங்கிரசால் மட்டுமே வழங்க முடியும் என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர். இதன் காரணமாகவே இந்தியாவில் பாஜகவையும், தமிழகத்தில் ஜெயலலிதாவையும் மக்கள் நிராகரித்துவிட்டனர்.
தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்...
சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளிலும் ஜனநாயகமுறைப்படி தான் வெற்றி பெற்றுள்ளோம். அந்த அதிகாரிகள் காங்கிரஸ்காரர்கள் அல்ல. நாங்கள் பெற்ற வெற்றி பண நாயகம் என்று கூறும் ஜெயலலிதா, அவர் பெற்ற வெற்றியை என்ன என்று சொல்கிறார். வெற்றி தோல்விகளை நல்ல தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பணியாற்றும். சில தொகுதிகளில் அந்தந்த தொகுதிகளில் உள்ள பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக தோல்வி அடைந்தாலும், அந்த தோல்விகள் பற்றி ஆராய்ந்து சரி செய்ய முயற்சிப்போம் என்றார் தங்கபாலு.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications