நெதர்லாந்து: இலங்கை தூதரகம் சூறையாடப்பட்டது
Subscribe to Oneindia Tamil
ஹேக்: நெதர்லாந்து நாட்டுத் தலைநகர் ஹேக்கில் உள்ள இலங்கை தூதரகம் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் தாக்கி சூறையாடப்பட்டது.
கட்டடத்திற்குள் பெட்ரோல் குண்டை வீசவும் முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் நடந்துள்ள 2வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் குறித்த தகவல் பரவிய நிலையில் ஹேக்கில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழர்கள் தாக்கினர்.
நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து இந்தத் தாக்குதலை நடத்தினர்.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை தூதர் கிரேஸ் ஆசிர்வாதம் கட்டடத்தைப் பார்வையிட்டார். பின்னர் நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகத்திடம் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications