எம்.பிக்களுக்கான ஜாக்பாட்
சென்னை: இந்தியாவில் தேர்தலில் வென்று எம்.பி. ஆவது என்பது ஒரு ஜாக்பாட் அடித்ததற்கு சமம் தான். மின்சாரம் இலவசம், தொலைபேசி இலவசம் என நினைத்த நேரத்தில் எல்லாம் கிடைக்கிறது. இம்முறை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இந்த சொகுசு வாழ்க்கையில் மூழ்கிவிடாமல் மக்களையும் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்தியாவில் எம்.பி. பதவி கிடைப்பது என்றால், அதை விட வேறு ராஜபோக வாழ்க்கை ஏதுமில்லை என சொல்லலாம்.
சமீபத்தில் 15வது நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 543 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்முறை சுமார் 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் புது முகங்களாக முதன் முறையாக நாடாளுமன்றம் செல்கின்றனர்.
இவர்கள் 543 பேருக்கும் நம் இந்திய அரசு வழங்கும் சலுகைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏராளமான சலுகைகளை கொட்டி கொடுக்கிறது.
இதோ அதன் பட்டியல்:
சம்பளம் மாதம் ரூ.16 ஆயிரம், நாடாளுமன்ற கூட்ட தொடருக்கான தினசரி படி ரூ.2 ஆயிரம், தொகுதிகளை பார்வையிட ஒரு நாள் படி ரூ. 20 ஆயிரம், அலுவலகம், உதவியாளர், தபால் செலவு மாதம் ரூ. 20 ஆயிரம் தரப்படுகிறது.
இதுதவிர இலவசமாக டெல்லி விமான பயணம், ரயில் பயணம், வருடத்திற்கு 34 முறை விமான மூலம் குடும்பத்தினரோடு இந்தியா முழுவதும் செல்லலாம்.
ரயிலிலும் இதே போல் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யலாம். 50 ஆயிரம் யூனிட் மின்சாரம், வீட்டிலும், அலுவலகத்திலும் தரைவழி தொலைபேசி ஆண்டுக்கு 50 ஆயிரம் இலவச போன் கால் பேசும் வசதி, 2 செல்போன்கள், மருத்துவ வசதி போன்றவைகள் உண்டு.
இந்தியாவிலுள்ள மத்திய அரசு துறைகளில் போர்டு உறுப்பினர் பதவிகள், இன்னும் பல்வேறு வசதிகள் புதியவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றன.