ஒரு அமைச்சர் பதவியும் வேண்டாம் - நாடு நல்லா இருந்தா போதும்: மமதா
டெல்லி: திரினமூல் காங்கிரஸ் அமைச்சர் பதவி கேட்டு காங்கிரஸை தொந்தரவு செய்யவில்லை. எங்களுக்கு எந்த அமைச்சர் பதவியும் தேவையில்லை. நாடு நலமாக இருக்க வேண்டும், தொழிலாளர் வர்க்கம் வளர்ச்சி பெற வேண்டும். அது போதும் என்று கூறியுள்ளார் திரினமூல் தலைவர் மமதா பானர்ஜி.
இதுகுறித்து டெல்லியில் மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு ஒரு அமைச்சர் பதவியும் வேண்டாம். நாடு நலமாக இருக்க வேண்டும்.
தொழிலாளர்கள் நலம் பாதுகாக்கப்பட வேண்டும். அது போதும் எங்களுக்கு என்றார்.
மேற்கு வங்க மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான திரினமூல் காங்கிரஸ் கட்சியின் பார்த்தோ சாட்டர்ஜி கூறுகையில், எங்களது தலைவரைப் பற்றி எங்களுக்கு நன்கு தெரியும்.
அமைச்சர் பதவி கேட்டு பேரம் பேச மாட்டேன் என அவர் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியிடம் இதுதொடர்பாக அவர் பேரம் ஏதும் பேசவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications