தூத்துக்குடியில் புது மணப்பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட 43வது நாளில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மடத்துரையை சேர்ந்தவர் பெரியசாமி. இவரும் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த கென்னடி மகள் மரியசிலுவை மணிஷா என்பவரும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர்.

பெரியசாமி மீது தாளமுத்து நகரில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூலி தொழிலாளியை கொலை செய்ததாக ஒரு வழக்கு உள்ளது. தற்போது அவர் ஜாமீனில் வந்துள்ளார்.

மேலும் அவர் வேலைக்கு எதுவும் செல்லாததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல் நேற்று காலையும் அவர்கள் இருவரும் கடுமையாக சண்டை போட்டுள்ளனர்.

இதையடுத்து மனமுடைந்த மரியசிலுவை மனிஷா தனது சேலையால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் தாளமுத்து நகர் போலீசார் ஜெயபிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

காதல் திருமணம் செய்த 43வது நாளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டிஓ வேலாயுதம் விசாரணை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+