நாளை எஸ்எஸ்எல்சி முடிவு- தட்ஸ்தமிழில் பார்க்கலாம்
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின. இதை உங்கள் தட்ஸ்தமிழ் இணையத்தில் நாளை காணலாம்.
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ, மாணவியர் எழுதினர்.
தனித் தேர்வர்களாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இந்த நிலையில் நாளை காலை 9 மணிக்கு பத்தாம் வகுப்பு, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி ஆகிய தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியாகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. இந்த தேர்வுகளின் முடிவு 23-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும்.
அதேநேரத்தில் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேர்வுகள் இயக்குநரகத்தின் பின்வரும் இணையதளங்களிலும் முடிவுகளைக் காணலாம்.
www.pallikalvi.in
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
என்று அந்த அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உங்கள் தட்ஸ்தமிழ் இணையதளத்திலும் நாளை காலை தேர்வு முடிவுகளைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் லேண்ட்லைன் எண் - 1250108 மற்றும் மொபைல் எண் - 1250108 ஆகியவற்றின் மூலமும் முடிவுகளை அறியலாம்.