முல்லைத்தீவு, கிளிநொச்சியில் ராணுவ முகாம்களை அமைக்க இலங்கை திட்டம்
கொழும்பு: வட இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலையெடுக்காமல் தடுப்பதற்காக தமிழர்கள் பகுதிகளான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில், ராணுவ முகாம்களை அமைக்க திட்டமிட்டு வருகிறதாம் இலங்கை அரசு.
விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து விட்டதாக கூறுகிறது இலங்கை அரசு. இந்த நிலையில், தமிழர் பகுதிகளில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலையெடுக்காமல் தடுப்பதற்காக ராணுவ முகாம்களை அமைக்க அது திட்டமிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் முந்தைய அரசியல் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி, ராணுவ ரீதியில் புலிகளின் தலைமையகமாக திகழ்ந்த முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இரு ராணுவ முகாம்களை அமைக்க அது திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக இந்த இரு பகுதிகளிலும் தமிழர்களை பெருமளவில் குடியமர்த்தாமல் தடுத்து நிறுத்தவும் அது திட்டமிட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இங்கு ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு அது நிச்சயம் பெரும் இடையூறாக அமையும், தமிழர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இது தடையாக அமையும் என்றும் அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications