For Daily Alerts
Just In
அரசு வேலைக்காக ஊராட்சி மன்ற தலைவர் பதவி ராஜினாமா
மதுரை: அரசு வேலை கிடைத்ததால், மதுரை மாவட்டம் தெத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அதன் தலைவர் முத்துப்பாண்டியன்.
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெத்தூரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (36). இவர் பி.எஸ்.சி., (விவசாயம்) படித்து உள்ளார்.
படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, கடந்த 2006 -ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தெத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், இவருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் வேளாண்மை துறையில் உதவி வேளாண்மை அலுவலர் பணி கிடைத்துள்ளது.
இதனால், தனது ஊராட்சிமன்ற தலைவர் பதவியை இவர் ராஜினாமா செய்துள்ளார்.
மதுரை தமிழ்நாடு ராஜினாமா alanganallur அலங்காநல்லூர் tamilnadu அரசு வேலை panchayat president பஞ்சாயத்துத் தலைவர் govt job
Story first published: Monday, May 25, 2009, 11:46 [IST]