அரசு வேலைக்காக ஊராட்சி மன்ற தலைவர் பதவி ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
மதுரை: அரசு வேலை கிடைத்ததால், மதுரை மாவட்டம் தெத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அதன் தலைவர் முத்துப்பாண்டியன்.
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெத்தூரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (36). இவர் பி.எஸ்.சி., (விவசாயம்) படித்து உள்ளார்.
படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, கடந்த 2006 -ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தெத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், இவருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் வேளாண்மை துறையில் உதவி வேளாண்மை அலுவலர் பணி கிடைத்துள்ளது.
இதனால், தனது ஊராட்சிமன்ற தலைவர் பதவியை இவர் ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications