பிரபாகரனின் மனைவி, மகள் மரணம்-கருணா

விடுதலை புலிகளின் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கருணா கடந்த 2004ல் அந்த அமைப்பில் இருந்து விலகினார். தற்போது இலங்கை அமைச்சராக இருக்கிறார்.
இந்நிலையில் அவர் கூறுகையில்,
இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் பிரபாகரனின் மனைவி, மகள் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் இறந்துவிட்டதாக அந்த அமைப்பின் வெளிவிவகார பிரிவு தலைவர் பத்மாநாபன் என்னிடம் தெரிவித்துள்ளார்.
அவர் சொல்வதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், அவர்கள் போர் பகுதியில் இருந்திருந்தால் நிச்சயமாக உயிர் தப்பியிருக்க முடியாது.
பிரபாகரன் அரசியல் தீர்வை ஏற்க மறுத்துவிட்டார். அவரால் தான் 1 லட்சம் தமிழர்கள் இறந்துள்ளனர். பல கோடி கணக்கில் சொத்துக்கள் நாசமாகியுள்ளது என்றார் கருணா.
இந்நிலையில் போர் உக்கிரமாக துவங்கிய சமயத்திலே பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் ஐரோப்பாவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களது உடல்களை கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் இதுவரை தெரிவிக்கவில்லை.
இளைய மகன் எங்கே?:
அதே நேரத்தில் அவரது இளைய மகன் பாலச்சந்திரன் எங்கு இருக்கிறார் என்பதும் மர்மமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications