அக்னி நட்சத்திர 'கத்திரி' வெயில் முடிந்தது!
சென்னை: கடந்த 4ம் தேதி துவங்கி தமிழக மக்களை வாட்டி வதைத்த கத்திரி வெயில் ஒரு வழியாக இன்றுடன் முடிவடைந்தது.
அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ல் துவங்கினாலும், சென்னையில் வெயிலின் உக்கிரம் ஏப்ரல் கடைசியில் இருந்தே அதிகம் காணப்பட்டது. மே மாத துவக்த்தில் 100 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்த வெயில் 13ம் தேதி அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டு மக்களை வாட்டியது.
வேலூரில் அக்னி நட்சத்திரம் நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை அறவே தவிர்த்து விட்டனர். இங்கு ஏப்ரல் ஆரம்பத்திலே வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டிபிடித்து, மக்களை பல வகையான வெக்கை நோய்களுக்கு ஆளாக்கியது.
அங்கு ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து 20 நாட்கள் உஷ்ணம் 100 டிகிரி பாரன்ஹீட்டை விட்டு இறங்காமல் இருந்தது. அதிகபட்சமாக மே 12ம் தேதி வெப்பம் 111 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது.
இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்தது. அதுவும் மே இரண்டாவது வாரத்தில் தமிழகம் முழுவதும் வெயிலின் அகோரம் அதிகமிருந்தது.
மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தர்மபுரி, சேலம், தஞ்சாவூர் என அனைத்து ஊர்களிலும் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
மே 4ம் தேதி துவங்கிய கத்திரி வெயில் 24 நாட்கள் நீடித்து ஒரு வழியாக இன்றுடன் முடிவடைந்தது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications