பிரபாகரன்-சார்லஸ் டிஎன்ஏ பொருந்தியது-ராணுவம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் அந்தோணியுடைய டிஎன்ஏக்கள் பொருத்தமாக இருப்பதாகவும், இதன் மூலம் பிரபாகரன் மரணமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

மே 18ம் தேதி பிரபாகரனுடைய உடலை கருணாவும், தயா மாஸ்டரும் அடையாளம் காட்டியதாகவும், பிரபாகரன் மரணமடைந்திருப்பதை டிஎன்ஏ சோதனை உறுதி செய்துள்ளதாகவும் கூறியது ராணுவம். பின்னர் அடுத்த ஓரிரு நாட்களில் பிரபாகரனுடைய உடலை எரித்து சாம்பலை கடலில் வீசி விட்டதாகவும் அது கூறியது.

இருப்பினும் பிரபாகரன் மரணம் குறித்தும், அவருடைய உடல் என்று ராணுவம் காட்டிய உடலுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், சார்லஸ் அந்தோணி மற்றும் பிரபாகரனுடைய டிஎன்ஏக்கள் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டதாகவும், இரண்டும் ஒத்துப் போவதாகவும், இதன் மூலம் பிரபாகரனுடைய மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+